Published : 07 Apr 2021 03:17 AM
Last Updated : 07 Apr 2021 03:17 AM
சட்டப்பேரவைத் தேர்தலை யொட்டி புதுச்சேரியில் நேற்று முன்தினம் இரவு பல பகுதிகளில் வீடு வீடாக பரிசுக் கூப்பன் விநி யோகிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடந்தது. வாக்குப்பதிவுக்கு முன் பாக 15 நாட்கள் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் இறங்கினர். பிரச்சாரம் ஓய்ந்த நாள் முதல் பல்வேறு தொகுதிகளில் வாக் காளர்களை கவர பல்வேறு யுக்திகளை பயன்படுத்தினர்.
தேர்தலுக்கு முந்தைய தினம் பல பகுதிகளில் பண விநியோகம் மும்முரமாக நடந்தது. பண விநியோகம் முடிந்த பிறகு டோக்கன் விநியோகம் இரவில் நடந்துள்ளது.
இதுதொடர்பாக அரசியல் கட்சியினர் கூறுகையில், “வேட்பா ளர்கள் தங்கள் செல்வாக்கை நிரூபிக்க டோக்கன் அரசியலை தொடங்கினர். ஒருவர் டோக்கன் கொடுத்தவுடன் மற்ற கட்சியைச் சேர்ந்தவர்களும் போட்டி போட்டுக் கொண்டு டோக்கன் வழங்கத் தொடங்கினர். நள்ளிரவில் வீடுக ளில் டோக்கனை வீசிவிட்டு சென் றனர்” என்று தெரிவித்தனர்.
வீட்டு வாசலில் டோக்கன் கிடந்ததாக பல வாக்காளர்கள் தெரிவித்தனர். ஒரு சில இடங்களில் டோக்கன் வழங்கியவர்கள் வெற்றி பெற்றால், அடுப்பு, குக்கர்,வாட்டர் பியூரிபயர் என பரிசுப்பொருட்கள் தருவதாக குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்தனர்.
வெற்றி பெற்றால்தான் பரிசுப் பொருட்கள்
“வெற்றி பெற்றால்தான் இந்த பொருட்கள் கிடைக்கும். எனவேஏமாறாமல் வெற்றி பெறுபவர்க ளுக்கு வாய்ப்பு தாருங்கள்” என முன்னணியில் இருந்த வேட் பாளர்களின் ஆதரவாளர்கள் நேற்று வீடு வீடாகவும், தங்கள் தொகுதிகளில் வாக்குச்சாவடி அருகேயும் வெளிப்படையாக நின்று பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். ஆனால் தேர்தல் துறையினர் அமைதி காத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT