

தமிழகத்தில் 3 மணி நிலவரப்படி 53.35% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக நாமக்கல்லில் 59.73 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக நெல்லையில் 41.58 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.
இது தொடர்பாக சென்னையில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“தமிழகம் முழுவதும் அமைதியாக வாக்குப்பதிவு நடந்து வருகிறது. பெரிதாக சட்டம்- ஒழுங்கு பிரச்சினை இல்லை. இவிஎம் பிரச்சினை எங்கும் இல்லை. பெரிய அளவில் எங்கும் பிரச்சினை இல்லை. வாக்குப்பதிவு சுமுகமாக நடக்கிறது.
தமிழகத்தில் 3 மணி நிலவரப்படி 53.35% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக நாமக்கல்லில் 59.73 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக நெல்லையில் 41.58 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன
உதயநிதி ஸ்டாலின் மீதான புகார் குறித்து அறிக்கை கேட்டுள்ளோம். அடுத்து முடிவு செய்வோம். மாலை 6 மணிக்கு மேல் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகம் இருந்தால் டோக்கன் அளித்து வாக்களிக்க வைப்போம். அதன் பின்னர் கடைசியில் கரோனா பாதித்த வாக்காளர் வாக்களிக்க வைக்கப்படுவார்கள். பிபிஇ கிட் அணிந்து வரலாம், அல்லது இங்கு தருவோம்”.
இவ்வாறு சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.
மாவட்ட வாரியாக 3 மணி நிலவரம்
சென்னை- 46.46%,
கடலூர்-54.92%
காஞ்சிபுரம்- 54.29%
செங்கல்பட்டு - 44.72%
திருவள்ளூர்- 52.42%
திருவண்ணாமலை - 56.71%
வேலூர் - 55.25%
விழுப்புரம் - 57.51%
கள்ளக்குறிச்சி - 58.14%
திருப்பத்தூர் - 55.49%
ராணிப்பேட்டை - 56.35%
அரியலூர் - 55.36%
நாகப்பட்டினம் - 49.59%
பெரம்பலூர் - 56.94%
புதுக்கோட்டை - 56.77%
தஞ்சாவூர் - 55.13%
திருச்சிராப்பள்ளி - 54.53%
திருவாரூர் - 55.31%
தருமபுரி - 56.84%
திண்டுக்கல் - 56.28%
கோயம்புத்தூர் - 50.77%
கரூர் - 58.62%
ஈரோடு - 55.89%
கிருஷ்ணகிரி - 54.65%
நாமக்கல் - 59.73%
நீலகிரி - 51.17%
சேலம் - 56.35%
திருப்பூர் - 52.91%
கன்னியாகுமரி - 51.02%
மதுரை - 52.26%
ராமநாதபுரம் - 51.96%
சிவகங்கை - 53.39%
தேனி - 53.98%
தூத்துக்குடி - 52.54%
திருநெல்வேலி - 41.58%
தென்காசி - 53.12%
விருதுநகர் - 56.80%