Published : 05 Apr 2021 03:15 AM
Last Updated : 05 Apr 2021 03:15 AM

மத்திய பாஜக ஆட்சியில் நாடு பாதுகாப்பாக இருப்பதோடு வளர்ச்சியும் அடைந்து வருகிறது: ஆவடி தேர்தல் பிரச்சாரத்தில் வாசன் புகழாரம்

சென்னையை அடுத்த ஆவடி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அமைச்சர் பாண்டியராஜனை ஆதரித்து, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது, அவர் கூறியதாவது:

ஆவடி தொகுதியின் வேட்பாளராக போட்டியிடும் அமைச்சர் பாண்டியராஜன், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சராக தமிழகம் மட்டும் இன்றி வெளிநாடுகளிலும் தமிழ் வளர்ச்சிக்கும், நாட்டுப்பற்றை வளர்க்கவும் சிறப்பாக பணியாற்றினார். அத்துடன், அகழ்வாராய்ச்சி மூலம் தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்தார்.

மத்திய பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில் நாடு பாதுகாப்பாக இருப்பதோடு, வளர்ச்சியும் அடைந்து வருகிறது. முதல்வரும், துணை முதல்வரும் சாதாரண மனிதர்களாக இருந்து மக்களை சந்தித்து அவர்களுடைய குறைகளையும், தேவைகளையும் நிறைவேற்றி வருகின்றனர்.

நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களையும் ஒப்பிடுகையில், தமிழகத்தில்தான் பெண்களுக்கு அதிக திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

மத்திய அரசு, மாநில அரசுகளுடன் இணக்கமாக இருப்பதில் எந்த தவறும் இல்லை. காங்கிரஸ் மத்தியில் பதவியில் இருந்தபோது, திமுகவும் அக்கட்சியுடன் இணக்கமாக செயல்பட்டது. இவ்வாறு வாசன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x