Published : 05 Apr 2021 03:15 AM
Last Updated : 05 Apr 2021 03:15 AM

பாஜக தேர்தல் அறிக்கை புதுச்சேரி மக்களின் வளர்ச்சிக்கான பார்வையை முன்வைக்கிறது: பாஜக தலைவர்கள் பெருமிதம்

புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதன், மாநில பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, தேர்தல் பொறுப்பாளர் ராஜீவ் சந்திரசேகர் எம்பி ஆகியோர் இணைந்து வெளியிட்ட அறிக்கை:

புதுச்சேரி மக்கள் ஒவ்வொரு வாக்கிலும் 5 ஆண்டுகளாக துரோ கம் செய்த காங்., - திமுகவுக்கு பாடம் புகட்ட வேண்டும். அதே நேரத்தில் ஒவ்வொரு வாக்கும் புதுச்சேரியை வளர்ச்சி மற்றும் வேலைகள் நிரப்புவதற்கான பாதையில் செல்லும் 'பெஸ்ட் புதுச்சேரி' (BESTPuducherry).

கடந்த 30 நாட்களில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய தலைவர் நட்டா ஆகியோர் தலா 2 முறை புதுச்சேரிக்கு வந்துள்ளனர். சாலை, துறைமுகங்கள், மீன்வளஅமைச்சர் மற்றும் நிதி அமைச் சர் பிரச்சாரத்திற்கு வந்து புதுச் சேரியை மாற்றுவதற்காக ஆதரவளித்துள்ளனர். இதற்கு நேர் மாறாக காங்கிரஸின் எந்த ஒரு தலைவரும் ஒரு முறை கூட புதுச்சேரிக்கு வரவில்லை. இதிலிருந்து புதுச்சேரியின் எதிர்காலத்தில் யார் அதிக அக்கறை கொண்டுள்ளனர் என்பதை நீங்கள் தீர்மானிக்கலாம்.

50,000-க்கும் மேற்பட்ட மக் களை கலந்தாலோசித்த பின்னர் தொகுக்கப்பட்ட எங்கள் தேர்தல் அறிக்கை புதுச்சேரி மக்களின் வளர்ச்சிக்கான ஒரு பார்வையை முன்வைக்கிறது. 2.5 லட்சம் வேலைகள், தொழில்கள் புத்துயிர் பெறுதல், அரசு காலியிடங்களை நிரப்புதல், அரசு வேலைகளில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு, ஒவ்வொரு பெண் மற்றும் சிறுமிகளுக்கும் இலவச சுகாதாரம் மற்றும் கல்வி, மீனவர்களுக்கு நீலப்புரட்சி, எஸ்சி, எஸ்டிக் களுக்கான வீடுகள், டப்ளின் மற்றும் மும்மடங்கு பால் மற்றும் உணவு தானியங்கள் முதலியன மற்றும் பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளோம்.

எங்கள் பிரச்சாரம் 'பெஸ்ட் புதுச்சேரி' மற்றும் காங்கிரஸ் இல்லாத புதுச்சேரி வேண்டும் என்று நாங்கள் உறுதியாக உள்ளோம்.

காங்கிரஸ், திமுக ஆகியோர் தேர்தல் செயல்முறையை குறை மதிப்பிற்கு உட்படுத்துவதற்காக நிர்வாகத்தில் சில கூறுகள் உள்ளிட்ட குண்டர்கள் மற்றும் பண சக்தியை தொடர்ந்து பயன் படுத்துகின்றனர். இது நடக்க நாங் கள் அனுமதிக்க மாட்டோம்.

காங்கிரஸ் - திமுக அரசாங்கம் பட்டியலின மக்களுக்கு பெரும் துரோகம் செய்திருக்கிறது. தாழ்த் தப்பட்ட மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் உயர் மின்கோபுரம் அமைப்பதில் பெரும் ஊழல் செய்திருக்கிறது. அதேநேரம் அவர்களுக்கு வீடு கட்ட 5 லட்சம் நிதி உயர்த்துவதாக அறிவித்த திட்டத்திற்கு நிதி இல்லை என்று காரணத்தைக் கூறி அத்திட்டத்தை செயல்படுத்த தவறியிருக்கிறது. பாஜகதான் தாழ்த்தப்பட்ட மக்களின் எதிரி என்று நாடக மாடி பொய் கூறுவதையே நாராயணசாமி வாடிக்கையாக்கி கொண்டுவிட்டார்.

சிறந்த புதுச்சேரியை உருவாக்க தாமரை, ஜக்கு மற்றும்இரட்டை இலைக்கு வாக்க ளியுங்கள். இவ்வாறு அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x