Published : 05 Apr 2021 03:15 AM
Last Updated : 05 Apr 2021 03:15 AM
அதிக வாக்கு வித்தியாசத்தில் அதிமுகவை வெற்றி பெற வைத்து மீண்டும் நல்லாட்சி மலர்ந்திட வழிவகை செய்யுங்கள் என்று போடியில் அதிமுக வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
போடியில் பிரச்சாரத்தை நிறைவு செய்து துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பேசியதாவது: மு.க.ஸ்டாலின் ஒருகாலத்திலும் முதல்வராக முடியாது. 2016-ம் ஆண்டு ஜெயலலிதா அறிவித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறை வேற்றப்பட்டுள்ளன. தற்போது அறிவித்துள்ள வாக்குறுதிகளும் கண்டிப்பாக நிறைவேற்றப் படும்.
அதிமுக அனைத்து சமூகத் தினருக்கும் பாரபட்சமின்றி பாது காப்பு அளித்து வருகிறது.
அதிமுக ஆட்சியில்தான் சாதி சண்டை இன்றி தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது. சிறுபான்மை இனத்தவரை பாதுகாக்கும் அரசு அதிமுக அரசு.
இந்த தேர்தலில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் அதிமுகவை வெற்றிபெறச் செய்து மீண்டும் நல்லாட்சி மலர்ந்திட வழிவகை செய்யுங்கள் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT