

இந்தத் தேர்தலில் மக்கள் அளிக்கும் தீர்ப்பு மத்தியில் மோடி ஆட்சிக்கு எச்சரிக்கை மட்டுமல்ல; அவரது ஆட்சியின் வீழ்ச்சிக்கும் தொடக்கமாக இருக்கப் போகிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்தியகம்யூனிஸ்ட் வேட்பாளர் சேது செல்வத்தை ஆதரித்து நேற்று இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா பிரச்சாரம் செய்தார்.
பின்னர் முதலியார்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவல கத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
புதுச்சேரியில் தேர்தல் நெருக்கத்தில், 144 தடை உத்தரவை அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் நடமாட்டத்தைத் தடுத்து, தேர்தல் பணியை முடக்கும் வகையில் இத்தடை போடப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழகம், புதுச்சேரியில் தேர்தலுக்காக அதிகார துஷ்பிரயோகமும், பணம்விநியோகமும் அதிகளவில் உள் ளதாக தகவல் வருகிறது.
தேர்தல் ஆணையம், சுதந்திர மான, நேர்மையான தேர்தலை நடத்த வேண்டும். ஏற்கெனவே வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் செல்வதில் குழப்பம், அவற்றை வாக்குப்பதிவின் போது பயன்படுத்துவதில் குளறுபடிகள் போன்ற பல்வேறு ஐயங்கள் மக்கள் மனதில் எழுந்துள்ளன. இவற் றையெல்லாம் தேர்தல் ஆணையம் கணக்கில் கொண்டு தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும்.
புதுச்சேரியில் இது ஒரு முக்கி யமான தேர்தல். புதுச்சேரி மாநிலஅந்தஸ்துக்கு தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சிகளும் தொடர்ந்து போராட்டங் களை நடத்தி வருகின்றன. மத்தியில் ஆளும் பாஜக தொடர்ந்து மாநில உரிமைகளை பறித்து வருகிறது. மாநில நலன்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது.
ஒரு நாடு ஒரு கலாச்சாரம், ஒரு நாடு ஒரு மதம், ஒரு நாடு ஒரு மொழி என்று தொடங்கி, இப்போது ஒரு நாடு ஒரு கட்சி, ஒரு நாடு ஒரு தலைவர் என்ற நிலைக்கு போக விரும்புகிறதோ என்ற சந்தேகம் வந்துள்ளது. ஆக்டோபஸ் போல நாடு முழுவதையும் கையில் பிடித்துக்கொள்ள வேண்டும் என்று ஆஎஸ்எஸ், பாஜக முயற்சிக்கிறது.
இந்த முயற்சி வெற்றி பெற்றால் நாட்டில் ஜனநாயகம் பறிபோய் விடும். எனவே இந்தத் தேர்தலில் மக்கள் அளிக்கும் தீர்ப்பு மத்தியில் மோடி ஆட்சிக்கு எச்சரிக்கை மட்டுமல்ல, அவரது ஆட்சியின் வீழ்ச்சிக் கும் தொடக்கமாக இருக்கப் போகி றது.
புதுச்சேரி மாநிலத்தில் பல பிரச்சினைகள் இருக்கின்றன. தொழிற்சாலைகள் மூடப்பட்டுள் ளன, புதிய தொழில்களுக்கு வாய்ப்பில்லை. இளைஞர்களின் வேலை வாய்ப்பு கேள்விக்குறியாகி உள்ளது. இங்கே வரும் பாஜக மத்திய அமைச்சர்கள் அதற்காக எதையும் செய்யவில்லை.
பெருமுதலாளிகளின் ஆதர வோடு, பெருந்தொகையுடன் மட்டுமே பாஜக இத்தேர்தலை சந்திக்கிறது. இந்தியாவிலேயே பெரும் பணம் படைத்த கட்சியாக பாஜக இருக்கிறது. இந்தப் பணத்தைஅதிகாரத்துக்கும், ஆட்சி கவிழ்ப் புக்கும் பாஜக பயன்படுத்தி வரு கிறது. பாஜகவின் பிடியிலிருந்து மக் களைக் காப்பாற்ற இத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட் டணியை ஆதரிக்க வேண்டும்.
புதுச்சேரியில் ஆதார் தகவலை தவறாகப் பெற்று பாஜக தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளது. இது ஜனநாயக விரோதச் செயல். அரசும்,தேர்தல் ஆணையமும் இதற்கு பதிலளிக்க வேண்டும்.
பழிவாங்கும் நோக்கத்தோடு எதிர்க்கட்சித் தலவர்களின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தியுள்ளது. பாஜகவைப் பார்த்து நாங்கள் அச்சப்படவில்லை. அவர்களின் ஆதிக்கத் தால், நாட்டு மக்களுக்கு என்னஆகுமோ என்ற கவலை எங்க ளுக்கு இருக்கிறது.
இவ்வாறு டி.ராஜா தெரிவித்தார்.
இந்தியாவிலேயே பெரும் பணம் படைத்த கட்சியாக பாஜக இருக்கிறது. இந்தப் பணத்தை அதிகாரத்துக்கும், ஆட்சி கவிழ்ப்புக்கும் பாஜக பயன்படுத்தி வருகிறது.