Published : 03 Apr 2021 03:13 AM
Last Updated : 03 Apr 2021 03:13 AM
தொழிற்சாலை மற்றும் கட்டுமான நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு வரும் 6-ம்தேதி சம்பளத்துடன் கூடிய விடுமுறை விடப்பட வேண்டும். சட்டவிதிகள் மீறப்பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றுதொழிலக பாதுகாப்பு, சுகாதாரகூடுதல் இயக்குநர் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் சட்டப்பேரவை பொதுத் தேர்தல் மற்றும் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்குஏப்ரல் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி தேர்தல் நாளன்று தொழிற்சாலைகள், கட்டிடம் மற்றும் கட்டுமான நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றும் பொருட்டு அனைத்து தொழிலாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும்.
எனவே, தமிழகத்தில் இயங்கும் அனைத்து தொழிற்சாலை நிறுவனங்களும், கட்டிடம் மற்றும் கட்டுமான நிறுவனங்களில் பணிபுரியும் நேரடி மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஏப்ரல் 6-ம் தேதி சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்.
புகார் தெரிவிக்கலாம்
மேற்கண்ட சட்டவிதிகளை மீறும் தொழிற்சாலை மற்றும் கட்டுமான நிறுவனங்கள் மீது தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர்களிடம் புகார் அளிக்கலாம்.
இணை இயக்குநர்கள் மற்றும் தொடர்பு எண் பின்வருமாறு:
சென்னை, கும்மிடிப்பூண்டி தாலுகா: எம்.வி.கார்த்திகேயன் - 9444221011, அம்பத்தூர், சென்னைதாலுகா: சரவணன் - 9843431020, கிண்டி தாலுகா: கவிதா - 9159662409, சென்னை, தாம்பரம் தாலுகா: ஜெயக்குமார் - 9176222394, திருவொற்றியூர், பொன்னேரி தாலுகா: பாலு - 9486918205, திருவள்ளூர் மாவட்டம்: குமார் - 9444002025, காஞ்சிபுரம் மாவட்டம்: இளங்கோவன் - 9443169506.
பெறப்படும் புகார்களின் பேரில் இணை இயக்குநர்களால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய குற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT