காசிமேடு மீனவர்களை தேடும் பணி தொடர்கிறது

காசிமேடு மீனவர்களை தேடும் பணி தொடர்கிறது
Updated on
1 min read

சென்னை காசிமேடு சிங்கார வேலன் நகரைச் சேர்ந்தவர் மணிவண்ணன். இவருக்கு சொந்தமான விசைப்படகில் காசிமேட்டைச் சேர்ந்த சரவ ணன், ராஜு , ராஜா, முரளி, விஜி ஆகியோர் கடந்த 7-ம் தேதி இரவு மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். நடுக் கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தபோது பலத்த காற்றுடன் மழை பெய்ததால் படகு பழுதானது. கடல்நீர் உட்புகுந்து படகு மூழ்கத் தொடங்கியது. இதனால் 5 மீனவர்களும் டீசல் வாங்க பயன்படும் காலி கேன்களைக் கொண்டு கடலில் குதித்து நீந்தி தப்பிக்க முயன்றனர்.

இதில் ராஜா, முரளி ஆகியோர் கோவளம் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களால் மீட்கப்பட்டு கரை திரும்பினர். மற்றொருவரான விஜி நெம்மேலி அருகே நீந்தி கரையேறினார்.

ஆனால் சரவணன், ராஜு ஆகியோர் மட்டும் கரை திரும்பவில்லை. அவர்களது நிலை என்னவானது என்பதும் தெரியவில்லை. உயிர் தப்பிய மீனவர்கள் கடலோர காவல்படைக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்தனர். இதை யடுத்து, அவர்களை தேடும் பணி தொடங்கியது.

இதுகுறித்து, மாமல்லபுரம் கடலோர பாதுகாப்பு குழும மண்டல ஆய்வாளர் வேலு கூறும்போது, ‘கடல் சீற்றதுடன் காணப்படுகிறது. காற்றின் வேகமும் அதிகமாக இருந்ததால் மீனவர்களை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. தற்போது, மழை குறைந்து காணப்படுவதால் கடலோர பாதுகாப்பு குழுமத்தைச் சேர்ந்த 30 வீரர்கள் மற்றும் கடற்படை வீரர்கள் 10 பேர் மீனவர்களை தேடும் பணியில் நான்காவது நாளாக ஈடுபட்டுள்ளனர்’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in