Last Updated : 02 Apr, 2021 03:35 PM

 

Published : 02 Apr 2021 03:35 PM
Last Updated : 02 Apr 2021 03:35 PM

புதுச்சேரியில் புதிதாக 213 பேருக்கு கரோனா தொற்று: மேலும் ஒருவர் உயிரிழப்பு

புதுச்சேரியில் புதிதாக 213 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத் துறைச் செயலர் அருண் (இன்று ஏப். 2) வெளியிட்டுள்ள தகவலில், ‘‘புதுச்சேரி மாநிலத்தில் 2,596 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 143 பேருக்கும், காரைக்காலில் 53 பேருக்கும், ஏனாமில் 13 பேருக்கும், மாஹேவில் 4 பேருக்கும் என மொத்தம் 213 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 41 ஆயிரத்து 941 ஆக உயர்ந்துள்ளது. இதில் தற்போது மருத்துவமனைகளில் 334 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 1,086 பேரும் என மொத்தம் 1,420 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மேலும், காரைக்கால் நல்லாத்தூரைச் சேர்ந்த 60 வயது மூதாட்டி தொற்றால் பாதிக்கப்பட்டு காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் இறப்பு எண்ணிக்கை 684 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.63 ஆகவும் உள்ளது.

இன்று 82 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 39 ஆயிரத்து 837 (94.98 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 6 லட்சத்து 76 ஆயிரத்து 176 பரிசோதனைகள் செய்யப்பட்டதில் 6 லட்சத்து 24 ஆயிரத்து 223 பரிசோதனைகளுக்குத் தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது.

மாநிலத்தில் சுகாதாரப் பணியாளர்கள் 27 ஆயிரத்து 461 பேர், முன்களப் பணியாளர்கள் 13 ஆயிரத்து 676 பேர், பொதுமக்கள் 33 ஆயிரத்து 183 பேர் என மொத்தம் 74,320 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது’’.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x