Published : 02 Apr 2021 03:11 AM
Last Updated : 02 Apr 2021 03:11 AM

புவி ஆய்வுக்கான ஜிஐசாட் செயற்கைக்கோள்: ஏப்.18-ல் விண்ணில் செலுத்த இஸ்ரோ முடிவு

தொழில்நுட்பக் கோளாறால் தள்ளிவைக்கப்பட்ட ஜிஐசாட் செயற்கைக்கோள், ஜிஎஸ்எல்வி எஃப்-10 ராக்கெட் மூலம் ஏப்.18-ம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளது.

புவி கண்காணிப்பு மற்றும் பேரிடர் மீட்பு பணிகளுக்காக ஜிஐசாட்-1 என்ற அதிநவீன ‘ஜியோ இமேஜிங்’ செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தயாரித்தது.

ஜிஎஸ்எல்வி எஃப்-10 ராக்கெட்

இந்த செயற்கைக்கோளை ஜிஎஸ்எல்வி எஃப்-10 ராக்கெட் மூலம் ஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து கடந்த ஆண்டு மார்ச் 5-ம் தேதி விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டது.

இந்நிலையில் திடீர் தொழில்நுட்பக் கோளாறால் ஜிஎஸ்எல்வி ராக்கெட் ஏவுதல் தேதிகுறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட் டது. அதைத் தொடர்ந்து, மார்ச் 28-ம் தேதி விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டிருந்தது. ஆனால், சில தொழில்நுட்ப பணிகள் இன்னும் முடிவடையாததால் ஏப்.18-ம் தேதி விண்ணில்செலுத்த இஸ்ரோ முடிவு செய்துள்ளது.

ஜிஐசாட் 2,268 கிலோ எடை கொண்டது. இதன் ஆயுட்காலம் 7 ஆண்டுகள். இதிலுள்ள 5 விதமான 3டி கேமராக்கள் மற்றும் தொலைநோக்கி மூலம் புவிப் பரப்பை துல்லியமாக படம் எடுக்கவும், பார்க்கவும் முடியும்.

மேலும், வானிலை நிலவரங்களை தொடர்ந்து கண்காணித்து புயல் உள்ளிட்ட பேரிடர் காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளவும் உதவும். ராக்கெட் ஏவுதலின் முன்னேற்பாட்டு பணிகளை விஞ்ஞானிகள் தற்போது தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x