Published : 02 Apr 2021 03:12 AM
Last Updated : 02 Apr 2021 03:12 AM

இரட்டை இலையோ, தாமரையோ வேறில்லை, இரண்டும் ஒன்றுதான்: ராமநாதபுரத்தில் நடிகை கவுதமி கருத்து

இரட்டை இலையோ, தாமரையோ வேறில்லை, இரண்டும் ஒன்றுதான் என நடிகை கவுதமி பேசினார். ராமநாதபுரம் தொகுதி அதிமுக கூட்டணியின் பாஜக வேட்பாளர் து.குப்புராமுவை ஆதரித்து நடிகை கவுதமி ராமநாதபுரம் அருகே சாத்தான்குளம், வாலாந்தரவை உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது, இந்தத் தேர்தலில் நல்லவர்களை பொறுப்புக்கு கொண்டுவர வாக்களிக்க வேண்டும். கெட்டவர்களுக்கு வாய்ப்புக் கொடுத்துவிடாதீர். இரட்டை இலையோ, தாமரையோ வேறில்லை, இரண்டும் ஒன்றுதான். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர்களுக்கு வாக்களித்தால், முதல்வர் பழனிச்சாமி தலைமையில் ஜெயலலிதாவின் ஆட்சி அமையும்.

இந்த ஆட்சி மீண்டும் தொடர்ந்தால், 6 சிலிண்டர் இலவசமாக கிடைக்கும். ரேஷன் கார்டு வைத்திருக்கும் ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கும் மாதம் ரூ. 1500, பெண் குழந்தை பிறந்தால் ரூ. 1 லட்சம் வைப்பீடு செய்யும் திட்டம் போன்றவை கிடைக்கும் என்று பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x