Published : 02 Apr 2021 03:14 AM
Last Updated : 02 Apr 2021 03:14 AM

தொடர்ந்து 3-வது முறையாக அதிமுக ஆட்சி: அமைச்சர் ஆர்.காமராஜ் உறுதி

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் ஆர்.காமராஜ் வலங்கைமான் ஒன்றியத்தில் அனியமங்கலம், கோவிந்தகுடி, இனாம்கிளியூர், நல்லூர் அன்னுக்குடி உள்ளிட்ட இடங்களில் நேற்று வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது, செய்தியாளர்களிடம் ஆர்.காமராஜ் கூறியது: நன்னிலம் தொகுதியில் 2 முறை எம்எல்ஏவாக இருந்து மக்களின் தேவைகளை நிறைவேற்றியுள்ளேன்.

குறிப்பாக, ஏழை, எளிய மக்களை கொண்ட நன்னிலம் தொகுதியில் மக்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையில் 2 அரசு கல்லூரிகள், ஒரு பாலிடெக்னிக் கல்லூரி ஆகியன கொண்டு வரப்பட்டுள்ளன. அனைத்து கிராமங்களுக்கும் பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

அதிமுகவின் வாக்குறுதிகள் மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளதால், 3-வது முறையாக அதிமுக ஆட்சி அமைக்கும் நிலை உள்ளது. அதிமுக ஆட்சியில் நன்னிலம் தொகுதியில் விவசாய கழிவு பொருட்களை கொண்டு புதிய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x