ஒட்டன்சத்திரம் மெயின்ரோட்டில் நடந்து சென்று திமுக வேட்பாளர் அர.சக்கரபாணிக்கு வாக்கு சேகரித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
ஒட்டன்சத்திரம் மெயின்ரோட்டில் நடந்து சென்று திமுக வேட்பாளர் அர.சக்கரபாணிக்கு வாக்கு சேகரித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

மோடி தமிழகம் வந்தாலே திமுகவுக்கு வெற்றிதான்: பழநியில் மு.க.ஸ்டாலின் பேச்சு

Published on

மோடி எப்போதெல்லாம் தமிழகம் வருகிறாரோ, அப்போதெல்லாம் திமுகவுக்கு வெற்றிதான் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன் சத்திரத்தில் திமுக வேட்பாளர் சக்கரபாணியை ஆதரித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேற்று மெயின் ரோட்டில் நடந்து சென்று வாக்குச் சேகரித்தார்.

உடன் வேட்பாளர் அர.சக் கரபாணி, திமுக துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் நடந்து சென்றனர்.

தொடர்ந்து பழநி சென்றவர் அங்கு பேசியதாவது:

திண்டுக்கல்லில் உள்ள சீனி வாசன் ஒரு காமெடி அமைச்சர். ஜெயலலிதா இட்லி சாப்பிட் டது பொய் என்று ஒத்துக் கொண்டவர். அவரால் இந்த மாவட்டத்துக்கு எந்தப் பயனும் கிடையாது. திண்டுக்கல் நகரை மாநகராட்சியாக உயர்த்தியும் மாநகராட்சிக்கான எவ்வித பணி யும் மேற்கொள்ளவில்லை.

குடிமராமத்துப் பணியில் பணத்தைக் கொள்ளையடித்தது தான் மிச்சம். எனவே திண்டுக்கல் சீனிவாசனை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். கருத்துக் கணிப்புகள் திமுகவுக்குச் சாதகமாக வந்தாலும் கட்சியினர் பணி செய்யாமல் இருந்துவிடக் கூடாது.

அதிமுகவினர் வெற்றிபெற்றால் பாஜகவினராகத்தான் இருப்பர். அதற்கு உதாரணம் ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத். எனவே டெபாசிட் கிடைக்காத அளவுக்கு அதிமுகவை தோல்வி அடையச் செய்ய வேண்டும். அதற்கு பிரதமர் மோடியும் நமக்கு உதவி வருகிறார். அவர் எப்போதெல்லாம் தமிழகம் வருகிறாரோ அப்போதெல்லாம் திமுகவுக்கு வெற்றிதான்.

திமுக ஆட்சிக்கு வந்ததும், அதிமுகவினரின் ஊழலைக் கண்டுபிடித்து மக்களிடம் அம்பலப் படுத்துவதுதான் ஸ்டாலினின் வேலை என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in