Published : 31 Mar 2021 03:15 AM
Last Updated : 31 Mar 2021 03:15 AM

எழுதி வைத்துக்கொள்ளுங்கள் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்டாலின்தான் பிரதமர்: கிருஷ்ணகிரி பிரச்சாரத்தில் துரைமுருகன் தகவல்

கிருஷ்ணகிரி மாவட்டம் வேலம்பட்டி கிராமத்தில் திமுக வேட்பாளர்கள் செங்குட்டுவன், மதியழகன் ஆகியோரை ஆதரித்து, கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் பிரச்சாரம் செய்தார்.

எழுதி வைத்துக் கொள்ளுங்கள் 10 ஆண்டுகளுக்கு பிறகுஸ்டாலின் பிரதமர் ஆகிவிடுவார் என கிருஷ்ணகிரி மாவட்டம் வேலம்பட்டியில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேலம்பட்டியில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் திமுக வேட்பாளர்கள் செங்குட்டுவன் (கிருஷ்ணகிரி) , மதியழகன் (பர்கூர்) ஆகியோரை ஆதரித்து, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் பேசியதாவது:

மத்திய அரசு, ‘ஒரே நாடு, மொழி, இனம்’ என்கிற முழக்கத்தை உருவாக்கி வருகிறது. நாட்டில் பல்வேறு இனம், மொழிகள், கலாச்சாரம், கடவுள் வழிபாடு உண்டு. இவற்றை அழிக்க ஒரு சூழ்ச்சி நடக்கிறது. அந்த சூழ்ச்சியை முறியடிக்க ஸ்டாலின் முதல்வராக வரவேண்டும்.

மத்திய அரசை எதிர்க்க ஒரு தைரியம் வேண்டும். அந்த தைரியத்தை கருணாநிதியிடம் இருந்து பெற்றவர் ஸ்டாலின். கருணாநிதியைப்போல மத்திய அரசை எதிர்த்தவர்கள் யாரும் இருக்க முடியாது. எதிர்க்கும் இரும்பு இதயம் கொண்டவர் ஸ்டாலின் என்பதால் அப்படிப்பட்ட ஒரு முதல்வர் தமிழகத்தில் அமர்ந்தால்தான் கலாச்சார படையெடுப்பை தடுக்க முடியும்.

எந்த கட்சியில் நீங்கள் இருந்தாலும் நீங்கள் தமிழன்தான். எனவே தமிழை காக்கின்ற கட்சிக்கு நீங்கள் வாக்களியுங்கள். எழுதி வைத்துக் கொள்ளுங்கள், ஸ்டாலின் 10 ஆண்டுகளுக்கு மட்டுமே முதல்வராக இருப்பார். அதன்பின்னர் அவர் பிரதமராகி விடுவார். இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x