Last Updated : 29 Mar, 2021 01:52 PM

 

Published : 29 Mar 2021 01:52 PM
Last Updated : 29 Mar 2021 01:52 PM

புதுச்சேரியில் கரோனா தொற்றுக்கு மேலும் ஒருவர் உயிரிழப்பு; புதிதாக 125 பேர் பாதிப்பு

பிரதிநிதித்துவப் படம்.

புதுச்சேரி

புதுச்சேரியில் கரோனா தொற்றுக்கு மேலும் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், புதிதாக 125 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

இதுகுறித்து, புதுச்சேரி சுகாதாரத் துறைச் செயலாளர் அருண் இன்று (மார்ச் 29) வெளியிட்டுள்ள தகவல்:

"புதுச்சேரி மாநிலத்தில் 1,464 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், புதுச்சேரி- 91, காரைக்கால்-28, மாஹே-6 என, மொத்தம் 125 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இன்றைய தினம் ஏனாமில் யாருக்கும் தொற்று ஏற்படவில்லை.

மேலும், மாஹேவைச் சேர்ந்த 67 வயது முதியவர் தொற்றால் பாதிக்கப்பட்டு மாஹே அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 681 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.65 சதவீதமாக உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 41 ஆயிரத்து 226 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 282 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 709 பேரும் என 991 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதனால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

இன்று 40 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 39 ஆயிரத்து 554 (95.94 சதவீதம்) ஆக உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் 6 லட்சத்து 67 ஆயிரத்து 782 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில், 6 லட்சத்து 17 ஆயிரத்து 934 பரிசோதனைகளுக்கு 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது".

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x