Published : 29 Mar 2021 03:15 AM
Last Updated : 29 Mar 2021 03:15 AM
ஸ்ரீபெரும்புதூரில் பொதுமக்களுக்கு தர்பூசணி பழம் வெட்டி விற்பனை செய்து அதிமுக வேட்பாளர் கே. பழனி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
ஸ்ரீபெரும்புதூர் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர் கே.பழனி தொகுதிக்கு உட்பட்ட எடையார்பாக்கம், மதுரமங்கலம், சோகண்டி, காந்தூர், பட்டுமுடையார்குப்பம் உள்ளிட்ட ஊராட்சிகளில் இரட்டை இலை சின்னத்துக்கு ஆதரவாக கூட்டணிக் கட்சியினருடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
முன்னதாக ஜெயலலிதா திருவுருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய வேட்பாளர் கே.பழனி பொதுமக்களை சந்தித்து அதிமுக அரசின் 10 ஆண்டு கால சாதனைகளை எடுத்து விளக்கி மீண்டும் நல்லாட்சி தொடர அதிமுகவுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
பின்னர் சாலையோரத்தில் இருந்த தர்பூசணி பழம் விற்பனை செய்யும் கடைக்கு சென்ற வேட்பாளர், தர்பூசணி பழத்தை தானே வெட்டி பொதுமக்களுக்கு விற்பனை செய்தும் உடன் வந்த தொண்டர்களுக்கு வழங்கியும் அதிமுக அரசின் சாதனைகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தும் ஆதரவு திரட்டினார். இதேபோல் காங்கிரஸ் வேட்பாளர் செல்வப்பெருந்தையும் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT