Published : 29 Mar 2021 03:16 AM
Last Updated : 29 Mar 2021 03:16 AM
புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் மண்ணாடிப்பட்டு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் நமச்சிவா யத்தை ஆதரித்து நடிகர் ராதாரவி நேற்று மாலை தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
திருக்கனூர் கடை வீதியில் அவர் பேசியதாவது:
புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ், பாஜக, அதிமுக, பாமக இணைந்து சிறப்பான கூட்டணி அமைத்துள்ளது. நான் முக்கியமாக இங்கு பேச ஒப்புக்கொண்டதே பாமக நம்மோடு இணைந்ததற்காக மட்டும் தான்.
அம்பேத்கரை பற்றி எல்லோ ரும் பேசலாம், சொந்தம் கொண்டாடலாம். ஆனால் தமிழகத்தில் ஒரே நாளில் அம்பேத்கரின் 7 சிலைகளை திறந்தது ராமதாஸ் மட்டும் தான்.அம்பேத்கர் லண்டனில் வாழ்ந்த இல்லத்தை பாஜக அரசு வாங்கி, அம்பேத்கரின் நினைவு சின்னமாக மாற்றியுள்ளனர். அங்குபட்டியலின மாணவர்கள் எப்போது வேண்டுமானாலும் சென்று தங்கலாம். இதுபோன்ற வசதிகளை மோடி செய்துள்ளார். இன்னும் 40 ஆண்டுகளுக்கு மத்தியில் ஆளப்போவது பாஜகதான். அதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
நீங்கள் கையேந்தும் இடம் டெல்லி என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். எனவே இங்குள்ள பாஜக, என்ஆர் காங்கிரஸ் கூட்டணியை தேர்ந்தெடுத்தால் நீங்கள் கையேந்த தேவையில்லை. ஆனால் நீங்கள் மாற்றி வாக்களித்தால் என்ன ஆகும் என்பதை முன் னாள் முதல்வர் நாராயணசாமியிடம் சென்று கேளுங்கள். இவர்களை, முன்பிருந்த ஆளுநர் முட்டிபோட வைத்தார். எனவே நீங்கள் வேறு யாரையாவது கொண்டு வந்து அமர வைக்க நினைத்தால் மீண்டும் முட்டிபோட வைப்போம்.
பாஜக வந்தாலொழிய புதுச்சேரியை யாராலும் காப்பாற்ற முடியாது. காங்கிரஸ் கட்சி இறந்து போய்விட்டது. இந்தியாவில் இனி காங்கிரஸ் என்ற பெயருக்கே இடமில்லை. பாஜக அவ்வளவு நல்லதை செய்துள்ளது.
ஆ.ராசா வாய்க்கு வந்தபடிதமிழக முதல்வரை விமர்சித்துள் ளார். இது திமுகவின் அராஜகம். அதோடு சேர்ந்த காங்கிரஸ் எப்படி இருக்கும் என்று பாருங்கள். புதுச்சேரிக்கு வந்திருந்த ராகுல் காந்திக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி தவறாக மொழி பெயர்த்தார். இதுபோன்ற தில்லு முள்ளுக்காரர்கள் தான் இங்குள்ளனர். காவிரி நீர் ஓட வேண்டும் என்றால் பாஜகவுக்கு வாக்களித்தால் தான் கிடைக்கும்.
பாஜகவை ஏன் ஏற்க வேண்டு மென்றால், நாளை நம்முடைய குழந்தைகளுக்கு கோயில் இருக்க வேண்டும். அவர்கள் அங்கு சென்று வழிபட வேண்டும். உண்மையான இந்துவாக இருந்தால் பாஜகவுக்கு வாக்களியுங்கள்.
முத்தக் காட்சியை தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்திய பெருமை கமலுக்கே உண்டு. எத்தனை தயாரிப்பாளர்களை நடக்கவிட்ட கமல் கோவையில் வீதிவீதியாக அலைகிறார். கமலிடம் இருப்பது கிறிஸ்துவ பணம்.
புதுச்சேரிக்கு பிரெஞ்சுக்காரன் ஒழுக்கத்தை கற்று கொடுத்தான். பிரிட்டிஷ்காரன் தமிழகத்தில் கற்றுத் தரவில்லை. இந்த சின்னஊரை கூட காங்கிரஸால் காப் பாற்ற முடியவில்லை என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT