Published : 03 Nov 2015 08:25 AM
Last Updated : 03 Nov 2015 08:25 AM

சொத்து புகார் குறித்து முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும்: திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தல்

முதல்வருக்கு நெருக்கமானவர் கள் சொத்து வாங்கியதாக எழுந்துள்ள புகார் குறித்து எதிர்க்கட்சித் தலைவர்களின் கேள்விக்கு அவர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

முதல்வருடன் நீண்டகாலமாக இருக்கும் ஒருவரின் குடும்பத்தினர் பெரும் மதிப்புள்ள சொத்துக்கள் வாங்கியிருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இது குறித்து நான் மட்டுமல்ல, தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் உள்ளிட்ட தலைவர்களும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இவ்வளவு சொத்துக்கள் வாங்க எங்கிருந்து பணம் வந்தது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் மக்களுக்கு விளக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் என்ன என்பதை அறிய தமிழக மக்கள் காத்திருக்கின்றனர். எனவே, இது குறித்து முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x