தி.மலை மாவட்டத்தில் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் 122 வேட்பாளர்களில் 10 பேர் மட்டுமே பெண்கள்: வாய்ப்பு வழங்காத முன்னணி அரசியல் கட்சிகள்

தி.மலை மாவட்டத்தில் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் 122 வேட்பாளர்களில் 10 பேர் மட்டுமே பெண்கள்: வாய்ப்பு வழங்காத முன்னணி அரசியல் கட்சிகள்
Updated on
1 min read

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் 122 வேட்பாளர்களில் 10 பெண்கள் மட்டுமே களத்தில் உள்ளனர்.

அரசியல் மற்றும் வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்படு கிறது. ஆனால், தேர்தல் களத்தில் தொடர்ந்து பெண்கள் புறக் கணிக்கப்படுகின்றனர். பெண் களை அங்கீகரிக்க முன்னணி அரசியல் கட்சிகள் உட்பட பலரும் முன்வரவில்லை. மேடை பேச்சுடன், தங்களது கர்ஜனையை நிறுத்திக் கொள்கின்றனர். அதற்கு, செயல் வடிவம் கொடுக்க மறுக்கின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத் தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 122 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்களில் 10 பேர் மட்டுமே பெண்கள். இதில் 8 சதவீத பெண்கள் மட்டுமே தேர்தல் களத்தில் நிற்கின்றனர். இவர்களில் 6 பேர், அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள். 4 பேர் சுயேட்சைகள். முன்னணி அரசியல் கட்சியினர், பெண்களுக்கு உரிய வாய்ப்பு வழங்கவில்லை.

திமுக போட்டியிடும் 8 தொகுதி களிலும் ஆண் வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளது. இதேபோல், 8 தொகுதியில் களம் காணும் பகுஜன் சமாஜ் கட்சியும், பெண்கள்போட்டியிட அனுமதிக்கவில்லை. மேலும், 5 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக, 2 தொகுதிகளில் போட்டியிடும் பாமக, ஒரு தொகுதியில் போட்டியிடும் பாஜக, 5 தொகுதிகளில் போட்டியிடும் அமமுக, 3 தொகுதிகளில் போட்டியிடும் தேமுதிக, 2 தொகுதிகளில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சி ஆகிய கட்சிகள், பெண் களுக்கு வாய்ப்பு வழங்க மறுத் துள்ளது.

அதே நேரத்தில், தேர்தல் களத்தில் 50 சதவீதம் பெண் களுக்கு நாம் தமிழர் கட்சி மட்டுமே வாய்ப்பு வழங்கி உள்ளது. திருவண்ணா மலை மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் களம் காணும் அக்கட்சி, 4 தொகுதிகளில் பெண்களை போட்டியிட அனுமதித் துள்ளது. 6 தொகுதிகளில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம், ஒரு தொகுதியில் போட்டியிட பெண் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கியுள்ளது.

மேலும், தேசிய சிறுபான்மையினர் மக்கள் கழகம் சார்பில் ஒரு பெண் போட்டியிடுகிறார்.

திருவண்ணாமலை சட்டப் பேரவைத் தொகுதியில் ஒரு பெண் கூட போட்டியிடவில்லை. கீழ்பென்னாத்தூர், போளூர் மற்றும் செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதியில் தலா 2 பெண்களும், செங்கம், கலசப்பாக்கம், ஆரணி மற்றும் வந்தவாசி சட்டப்பேரவைத் தொகுதியில் தலா ஒரு பெண்ணும் போட்டியிடுகின்றனர்.

எதிர் காலத்தில், தேர்தல் அரசியலில் பெண்களுக்கு அனைத்து கட்சிகளும் சமமான வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in