Last Updated : 27 Mar, 2021 03:43 PM

 

Published : 27 Mar 2021 03:43 PM
Last Updated : 27 Mar 2021 03:43 PM

புதுச்சேரியில் கரோனாவுக்கு மேலும் ஒருவர் உயிரிழப்பு: புதிதாக 128 பேர் பாதிப்பு

புதுச்சேரியில் கரோனா தொற்றுக்கு மேலும் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், புதிதாக 128 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு 680 ஆக உயர்ந்துள்ளது. கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டோர் எண்ணிக்கையும் 60 ஆயிரத்தை கடந்துள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் அருண் இன்று (மார்ச் 27) வெளியிட்டுள்ள தகவலில், ‘‘புதுச்சேரி மாநிலத்தில் 2,022 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி-94, காரைக்கால்-32 , ஏனாம்-1 பேருக்கும், மாஹே-1 என மொத்தம் 128 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இன்றைய தினம் புதுச்சேரி கோர்காடு பகுதியைச் சேர்ந்த 72 வயது முதியவர் தொற்று பாதிக்கப்பட்டு இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரியில் உயிரிழந்துள்ளார். இதனால் இறப்பு எண்ணிக்கை 680 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு விகிதம் 1.66 ஆக நீடிக்கிறது. புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 40 ஆயிரத்து 964 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது மருத்துவமனைகளில் 267 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 579 பேரும் என 846 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று 36 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 39 ஆயிரத்து 438 ஆக உள்ளது.

புதுச்சேரி மாநிலம் முழுவதும் இதுவரை 6 லட்சத்து 63 ஆயிரத்து 740 பரிசோதனைகள் செய்யப்பட்டன. இவற்றில் 6 லட்சத்து 15 ஆயிரத்து 229 பரிசோதனைகளுக்கு தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது.

இதுவரை சுகாதார பணியாளர்கள் 24 ஆயிரத்து 389 (51 நாட்கள்), முன்களப் பணியாளர்கள் 10 ஆயிரத்து 158 (39), பொதுமக்கள் 25 ஆயிரத்து 928 பேர் (23 நாட்கள்) என மொத்தம் 60 ஆயிரத்து 475 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.’’ இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x