திமுக மீதான கோபத்தை கொட்டித் தீர்த்த முல்லைவேந்தன் 

திமுக மீதான கோபத்தை கொட்டித் தீர்த்த முல்லைவேந்தன் 
Updated on
1 min read

திமுக முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன், கடந்த 22-ம் தேதி தேர்தல் தருமபுரியில் முதல்வர் பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். கடந்த 24-ம் தேதி மிக நீண்ட இடைவெளிக்கு பின்னர் அரசியல் மேடையில் முல்லைவேந்தன் குரல் ஒலித்தது.

அவர் பேசும்போது, ‘சாதாரண விவசாயி இன்று கோட்டையில் இருப்பதை ஸ்டாலினால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஒரு மாநிலத்தின் முதல்வரை தரம் தாழ்ந்த வார்த்தைகளில் விமர்சிப்பது நாகரீகமா? செல்வகணபதி, செந்தில் பாலாஜி போன்றவர்களை எல்லாம் திட்டியது திமுக. உங்களிடத்தில் சேர்ந்ததும் அவர்கள் புத்தனாகி விட்டார்களா? 8 வழிச் சாலை வேண்டாம் என்கிறார். அரூர்-தருமபுரிக்கு 4 வழிசாலை அமைப்பேன் என்கிறார் என்று ஸ்டாலினை விமர்சித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in