Published : 26 Mar 2021 03:15 AM
Last Updated : 26 Mar 2021 03:15 AM

சசிகலாவை அதிமுகவில் சேர்க்க வாய்ப்பே இல்லை: ஓபிஎஸ் கருத்து பற்றி ஜெயக்குமார் பதில்

சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து ஓ.பன்னீர்செல்வம் தனதுகருத்தை வெளியிட்டுள்ள நிலையில், அவரை கட்சியில் சேர்க்க வாய்ப்பு இல்லை என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

பெங்களூரு சிறையில் இருந்துவிடுதலையாகி தமிழகம் வந்துள்ள சசிகலா, அரசியலில் இருந்துஒதுங்கி இருக்கப் போவதாக அறிவித்துள்ளார். முன்னதாக அவரைஅதிமுகவில் இணைக்க 100 சதவீதம் வாய்ப்பில்லை என்று முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள் உள்ளிட்டோர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலாகுறித்த கேள்விக்கு, ‘‘அவர் மீது எந்த வருத்தமும் இல்லை. தற்போதுள்ள அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் என்ற அமைப்பை ஏற்றுக்கொண்டால் அவரை சேர்ப்பது குறித்து பரிசீலிக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.

இந்நிலையில், ராயபுரத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த அமைச்சர் டி.ஜெயக்குமாரிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘‘ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர். அவர் கூறியதன் மீது கருத்துசொல்ல இயலாது. ஆனால், கட்சிநிலைப்பாடு அடிப்படையில் சசிகலாவை சேர்க்க வாய்ப்பு இல்லை என முதல்வர் தெரிவித்துள்ளார். நானும் அதே கருத்தைதான் கூறியுள்ளேன்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x