Published : 25 Mar 2021 03:15 AM
Last Updated : 25 Mar 2021 03:15 AM
பழநியில் அதிமுக வேட்பாளர் ரவி மனோகரனை ஆதரித்து தமிழக முதல்வர் பழனிசாமி நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது: அதிமுக தலைமையிலான கூட்டணி நாட்டு மக்களுக்குச் சேவை செய்யும் கூட்டணி, திமுக தலைமையிலான கூட்டணி சந்தர்ப்பவாதக் கூட்டணி. எவ்வளவு அவதூறுப் பிரச்சாரம் செய்தாலும் எங்களை வீழ்த்த முடியாது. ஸ்டாலின் விரக்தியில் பேசி வருகிறார். நெற்றியில் வைத்த விபூதியை அழித்தும், பசும்பொன் தேவர் நினைவிடத்தில் விபூதியை கீழே கொட்டியும், இந்து மத நம்பிக்கையைத் தொடர்ந்து அவமதிப்பு செய்யும் ஸ்டாலின் இன்று கையில் வேலை தூக்கி உள்ளார்.
ஸ்டாலினின் முதல்வர் கனவு பலிக்காது. இந்தத் தேர்த லோடு திமுகவின் சகாப்தம் முடிவடைந்துவிடும். பழநியை, திருப்பதி போல மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். பழநி தனி மாவட் டமாக உருவாக்கப்படும்.
தைப்பூசத்துக்கு அரசு பொது விடுமுறை அளித்தது அதிமுக அரசுதான். இவ்வாறு அவர் பேசினார்.
திண்டுக்கல்லில்...
திண்டுக்கல் தொகுதி அதி முக வேட்பாளர் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசனை ஆதரித்து முதல்வர் பழனிசாமி பேசியதாவது: இம்மாவட்டத்துக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைக் கொண்டு வந்துள்ளோம். இந்த ஆட்சியில் சாதி, மதச் சண்டை கிடையாது. அனைத்து மக்களும் அமைதியாக வாழ்கின்றனர். ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள ஆண்டுக்கு ரூ.10 கோடி ஒதுக்கப்படும். பாஜக வுக்கு அடிமை என்கின்றனர். அதிமுக என்றைக்கும், யாருக்கும் அடிமை இல்லை.
மத்திய, மாநில அரசுகள் இணைந்து பணியாற்றினால்தான் திட்டங்களை பெற முடியும். ஆகவே சுமூக உறவு வைத்துள்ளோம். திமுக பாஜகவுடன் கூட்டணி வைத்தால் நல்ல கட்சி. இல்லையென்றால் அது மோசமான கட்சியா? பேச்சு மூச்சில்லாமல் இருந்த முரசொலி மாறனுக்கு பதவி கொடுத்த கட்சி பாஜக. அப்போது அது நல்ல கட்சியாகத் தெரியவில்லையா.? கிறிஸ்தவர்களுக்கு நிறைய திட்டங்களை செய்துள்ளோம். சிறு பான்மை மக்களை பாதுகாத்து வரும் இயக்கம் அதிமுக. இவ் வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT