

தமிழகம் வீரநடை போடவில்லை. தள்ளாட்டம் போட்டுக் கொண்டி ருக்கிறது. தமிழகத்தைக் கட்ட மைக்க தேவையான அஸ்திவாரம் நேர்மை என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப்பேரவைத் தொகு திகளில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அருப்புக்கோட்டையில் நேற்று மாலை பிரச்சாரக் கூட்டம் நடை பெற்றது.
இதில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பேசிய தாவது: உங்களுக்கு வேலை செய் வதற்காக வந்துள்ளோம். நிரந்தர வேலைவாய்ப்பு வழங்கப்படும், இலவசங்கள் கிடையாது. ஏனெ னில் இலவசங்களால் ஏழ் மையைப் போக்க முடியாது.
நான் ஹெலிகாப்டரில் சென்று பிரச்சாரம் செய்வதாகக் கூறுகிறார்கள். எனது சொந்த செல வில்தான் நான் ஹெலிகாப்டரில் செல்கிறேன். கஜா புயலைப் பார்வையிட்டதுபோல் மக்கள் பணத்தில் ஹெலிகாப்டரில் செல் லவில்லை. நமது வேட்பாளர்கள் உங்களுக்குச் சேவை செய்ய வந்துள்ளார்கள். இவர்களுக்கு நான் பல்லக்கு தூக்குவேன். என் தோளில் சுமப்பேன்.
எனது வாக்குறுதிகளை ஸ்டாலின் அப்படியே எடுத்துக் கூறுகிறார். மிகுந்த பசியில் உள்ள அவர்கள் இரட்டை இலையில் கூட சாப்பிடுவார்கள். திரைப்பட வாய்ப்பை விட்டு வந்ததால் எனக்கு ரூ.300 கோடி நஷ்டம் அல்ல. வருமானத்தை விட்டு விட்டு வந்துள்ளேன். அதிமுக இடைஞ்சல் செய்யாமல் இருந்திருந்தால் எனது வருமானத்தை ரூ.250 கோடியாக காட்டியிருப்பேன்.
உங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல என்று கூறுங்கள், அல்லது ரூ.5 லட்சம் கேளுங்கள். சலு கைகளைக் கொடுத்தால் அதைத் திருப்பி வாங்க டாஸ்மாக் என்ற கல்லாப்பெட்டியை வைத்துள் ளார்கள். இங்கு படிப்புக்கு மதிப் பில்லாமல் போகிறது.
எனவே, இளைஞர்களின் திறனை மேம்படுத்த வேண்டும். திறன் மேம்பாட்டு மையம் அமைப்பது இந்தியாவின் புதிய சத்தியாகிரகம்.
வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தால் தமிழன் வெல்வான். நாங்கள் 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலை தருகிறோம். தமிழகத்தைக் கட்டமைக்கத் தேவையான அஸ்திவாரம் நேர்மை என்பதாக இருக்க வேண்டும், என்று பேசினார்.