

இலங்கை கடற்படையினர், 15 வயது மீனவச் சிறுவன் உட்பட ராமேசுவரம் மீனவர்கள் 6 பேரை நேற்று சிறைபிடித்து வவுனியா சிறையில் அடைத்தனர்.
ராமேசுவரம் மீன்பிடி துறை முகத்தில் இருந்து 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சனிக்கிழமை கடலுக்குச் சென்ற னர்.
கச்சத்தீவு அருகே நேற்று அதிகாலை மீன்பிடித்துக் கொண் டிருந்த ஒரு படகின் கீழ் பகுதியில் உள்ள புரொப்பல்லரில் மீன்பிடி வலை சிக்கியது. இதனால் படகு பழுதாகி நடுக்கடலில் நின்றது.
அப்போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் விசைப் படகை தலைமன்னார் கடற்படை முகாமுக்கு இழுத்துச் சென்றனர். படகில் இருந்த மீனவர்கள் ஆரோக்கியராஜ், ராஜு, அப்போஸ் தலன், கோபிதாஸ், பேரின்பம், பிரைசர் ஆகிய மீனவர்களை மன்னார் மீன்வளத் துறை அதி காரிகளிடம் ஒப்படைத்தனர்.
நீதிமன்றத்துக்கு நேற்று விடு முறை என்பதால் மன்னார் நீதி மன்ற நீதிபதி வீட்டில் மீனவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களை நவம்பர் 13 வரை நீதிமன்றக் காவ லில் அடைக்க நீதிபதி உத்தர விட்டார். அதைத் தொடர்ந்து 5 மீனவர்கள் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதில் பிரைசர் 15 வயது சிறுவ னாக இருப்பதால் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதர் என். நடராஜன் மேற்பார்வையில் மன்னார் சிறுவர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
இலங்கை கடற்படையினரால் ஏற்கெனவே சிறைபிடிக்கப்பட் டுள்ள 120 தமிழக மீனவர்கள் தீபாவளி பண்டிகைக்கு முன்பு விடுதலை செய்யப்படுவார்கள் என இலங்கை அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவித்த மறுநாளே ராமேசுவரம் மீனவர்கள் மேலும் 6 பேர் சிறைபிடிக்கப்பட்டிருப்பது தமிழக மீனவர்களின் வேதனையை அதிகரித்துள்ளது.