Published : 04 Nov 2015 08:18 AM
Last Updated : 04 Nov 2015 08:18 AM
தீவுத்திடலில் தனிப்படையினர் நடத்திய சோதனையில் சீன லேபிள்கள் ஒட்டப்பட்ட பட்டாசுகள் மற்றும் பழைய பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சீன பட்டாசுகளை விற்பனை செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. ஆனால் திருட்டுத் தனமாக கொண்டுவரப்படும் சீன பட்டாசுகள் ஆங்காங்கே விற்பனை செய்யப்படுகின்றன. சீன பட்டாசு விற்பனையை தடுக்க 42 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை யினர் தமிழ்நாடு முழுவதும் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை தீவுத்திடலில் ஒரே இடத்தில் 80 பட்டாசு கடைகள் வைக்கப் பட்டுள்ளன. இந்த கடைகளில் தனிப்படையினர் நேற்று சோதனை நடத்தினர். அப்போது ஒருசில கடைகளில் சீன மொழியில் லேபிள்கள் ஒட்டப்பட்டிருந்த பட்டாசுகளை பறிமுதல் செய் தனர். மேலும், கடந்த ஆண்டு விற்பனையா காத பழைய பட்டாசுகளையும் பறிமுதல் செய்தனர்.
சீன லேபிள்கள் ஒட்டப்பட்டிருந்த பட்டாசு களை பறிமுதல் செய்வதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். "கடந்த ஆண்டு சீன பட்டாசுகள் அதிகமாக விற்பனையானதால் இந்தியாவில் தயாரான பட்டாசுகளில் சீன லேபிள்கள் ஒட்டப்பட்டு விற்பனை செய்யப்பட் டன. இப்படி கடந்த ஆண்டு லேபிள்கள் ஒட்டி விற்பனையாகாத பட்டாசுகள்தான் இது. இவை முழுக்க முழுக்க இந்திய பட்டாசுகள்தான்" என்று தனிப்படையினருடன் வியாபாரிகள் வாக்குவாதம் செய்தனர். ஆனால் தனிப்படையினர் சீன லேபிள்கள் ஒட்டப்பட்ட பட்டாசுகள் அனைத்தையும் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் வடபழனி காவல் நிலையம் எதிரே உள்ள ஒரு பட்டாசு குடோனிலும் தமிழகத்தில் பல பகுதிகளிலும் தனிப்படையினர் நேற்று சோதனை நடத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT