Published : 22 Mar 2021 03:13 AM
Last Updated : 22 Mar 2021 03:13 AM

அதிமுக தேர்தல் அறிக்கை மீது மக்களுக்கு நம்பிக்கை: ஈரோட்டில் ஜி.கே.வாசன் தகவல்

மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் தேர்தல் அறிக்கையை அதிமுக வெளியிட்டுள்ளது, என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் தமாகா இளைஞரணித் தலைவர் எம்.யுவராஜாவை ஆதரித்து ஈரோடு சம்பத் நகர், வீரப்பன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அவருடன், தற்போதைய கிழக்குத்தொகுதி எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு, தமாகா மாநில பொதுச்செயலாளர் விடியல் சேகர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

முன்னதாக தமாகா தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழக அரசின் அனைத்துத் துறை திட்டங்களும், சலுகைகளும் நகரம் முதல் கிராமம் வரை அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைந்துள்ளது. இதனால் மக்கள் அரசின் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர். இந்த நம்பிக்கையால் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியின் வெற்றி பிரகாசமாகி உள்ளது. நல்லது செய்தவர்களுக்கு மக்கள் மனம் திறந்து வாக்களிப்பார்கள். அ.தி.மு.க. தொடர்ந்து நல்லதே செய்து கொண்டிருக்கிறது.

மக்களுக்கு நம்பிக்கையளிக்கக் கூடிய தேர்தல் அறிக்கையை அதிமுக வெளியிட்டுள்ளது. திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு தொடர்பாக மக்களுக்கு பயம் இருந்தது. ஆனால், அதிமுக ஆட்சியில் கடந்த 10 ஆண்டு காலமாக சட்டம் ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது, என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x