Published : 20 Mar 2021 03:15 AM
Last Updated : 20 Mar 2021 03:15 AM

அதிமுக, பாஜகவுக்கு வாக்களித்தால் இலவச மின்சார திட்டம் ரத்தாகும்: ஐ.பெரியசாமி பேச்சு

அதிமுக, பா.ஜக., கூட்டணிக்கு வாக்களித்தால் விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை ரத்து செய்து விடுவர் என திமுக மாநில துணைப்பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி பேசினார்.

ஒட்டன்சத்திரம் தொகுதி திமுக சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. திண்டுக்கல் எம்.பி. வேலுச்சாமி தலைமை வகித்தார். நகர் செயலாளர் வெள்ளைச்சாமி வரவேற்றார். ஒட்டன்சத்திரம் தொகுதி திமுக வேட்பாளர் அர.சக்கரபாணி பேசினார். திமுக மாநில துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி பேசியதாவது:

ஒட்டன்சத்திரம் தொகுதியில் போட்டியிடும் அர.சக்கரபாணி 24 மணி நேரமும் மக்களுக்காக உழைக்கக் கூடியவர். தொகுதியில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளார்.

அதிமுக, பா.ஜ.வுக்கு வாக் களித்தால் விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை ரத்து செய்து விடுவர். சிறுபான்மையினரின் நலன் காக்கும் அரசாக திமுக அரசு என்றும் செயல்படும். விவசாயிகளுக்குப் பல்வேறு திட்டங்களை செயல்படுத்திய இயக்கம் திமுகதான் என்றார்.

கூட்டத்தில் திமுக கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் பொன்ராஜ் நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x