

விருதுநகர் சட்டப்பேரவை தொகுதிக்கு அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஜி.பாண்டுரங்கனை ஆதரித்து விருதுநகரில் சட்டப்பேரவை நிர்வாகிகள் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இதில் தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கினார்.
அதைத்தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில், வெற்றி ஒன்றே இலக்காக எங்கள் பயணம் உள்ளது. தமிழ்நாட்டு மக்கள் கட்டப்பஞ்சாயத்தை விரும்ப மாட்டார்கள், மாறாக வளர்ச்சியை மட்டுமே தேவையாக கொள்வார்கள்.
தமிழ்நாட்டின் நண்பனாக மோடி விளங்குகிறார். எதிரியாக சிலர் விளங்குகின்றனர். தமிழகத்துக்கு ரூ.6 லட்சத்து 10 ஆயிரம் கோடியை பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்துள்ளார் பிரதமர் மோடி. தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். கூட்டணிக் கட்சிகள் ஒற்றுமையுடன் இணைந்து செயல்படுவோம். அதிமுக கூட்டணி விருதுநகர் தொகுதியில் வலுவாக உள்ளது, எனவே வெற்றி உறுதி என்றார்.