

அதிமுக கூட்டணியில் குறைந்த தொகுதிகளை பெற்றதால், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காமல் பாஜக மாவட்ட தலைவர்கள் அதிருப்தியில் உள் ளனர்.
பொதுவாக ஒவ்வொரு தேர் தலிலும் பாஜகவில் மாவட்டத் தலை வர்களுக்கு அதிக அளவில் சீட் கொடுக்கப்படும். தற்போது பாஜக அறிவித்துள்ள வேட்பாளர்கள் பட்டியலில் பெரும்பாலான தொகுதிகளில் பாஜக மாநில நிர்வாகிகளே வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். திரு வையாறு, திருக்கோவிலூர் ஆகிய தொகுதிகளில் மட்டும் மாவட்ட நிர்வாகிகள் வேட்பாளர் களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதிமுகவிடம் குறைந்த தொகுதி பெற்றது, போட்டியிட வாய்ப்பு மறுப்பு ஆகிய காரணங்களால் பாஜக மாவட்டத் தலைவர்கள் அதிருப்தியில் உள்ளனர். இந்த அதிருப்தி காரணமாக வேட்பு மனுத் தாக்கல் தொடங்கிய போதிலும் தேர்தல் பணியில் பாஜக மாவட்டத் தலைவர்கள் ஆர்வம் காட்டாமல் உள்ளனர். மதுரை ஒத்தக்கடையில் திறக் கப்பட்ட கிழக்குத் தொகுதி தேர்தல் அலுவலகம், கோ.புதூரில் திறக்கப்பட்ட மதுரை வடக்குத் தொகுதி தேர்தல் அலுவலகம் ஆகியவை மூடப்பட்டுள்ளன.
இது குறித்து மாவட்டத் தலைவர் ஒருவர் கூறியதாவது:
தமிழகத்தில் பாஜக மூன் றாவது பெரிய கட்சியாகும். அதிமுக கூட்டணியில் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மட்டும் செல்வாக்குள்ள பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கிய நிலையில், அதை விட குறைவாக 20 தொகுதி மட்டுமே தருவதாக கூறியபோது, அதற்கு பாஜக தலைவர்கள் சம்மதம் தெரிவித்திருக்கக்கூடாது.
பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு இல்லாத தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் பாஜக தனித்துப் போட்டியிட்டாலே 30 முதல் 40 தொகுதிகளில் வெற்றி பெற முடியும். அதை மனதில் கொண்டு அதிமுக கூட்டணியை விட்டு வெளியேறி பாஜக தலைமையில் 3-வது அணி அமைத்து தேர்தலை சந்தித்திருக்க வேண்டும். கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியபோது கூடுதல் தொகுதிகள் கிடைக்கும் என நினைத்திருந்தோம். அதன் பிறகும் கூடுதல் தொகுதிகள் ஒதுக் கவில்லை. இதனால் தேர்தல் பணி செய்வதில் ஆர்வம் இல்லாத நிலையில் உள்ளோம் என்றார்.