Last Updated : 16 Mar, 2021 03:14 AM

 

Published : 16 Mar 2021 03:14 AM
Last Updated : 16 Mar 2021 03:14 AM

சோழவந்தான் அருகே ரேஷன் அரிசியில் ஆரத்தி: அதிமுக வேட்பாளருக்கு ‘ஷாக்’ கொடுத்த பெண்கள்

மதுரை மாவட்டம், சோழவந்தான் தொகுதி அதிமுக வேட்பாளர் எம்எல்ஏ மாணிக்கம், அலங்கா நல்லூர் பகுதிகளில் கிராமம், கிராமமாகச் சென்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

குமாரம், மணியஞ்சி, தண்டனை உள்ளிட்ட கிராமங்களில் அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்பகுதி பெண்கள் வழி நெடு கிலும் அவரை ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

குமாரம் பகுதியில் அவர் வாக்குச் சேகரிக்கச் சென்றார். அப்போது, ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி மோசமாக உள்ளதைச் சுட்டிக் காட்டும் வகையில் தட்டில் ரேஷன் அரிசியை பரப்பி எம்எல்ஏவுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர். மேலும் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி தரமற்று உள்ளதாகவும், இனியாவது தரமான அரிசியை வழங்குமாறும் அவரிடம் சில பெண்கள் வாக்குவாதம் செய்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணிக்கம் சிரித்துக்கொண்டே அந்தப் பகுதியை விட்டு விரைவாகச் சென்று விட்டார்.

பின்னர் அவர் வாடிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலரிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது தேனி எம்பி ரவீந்திரநாத்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x