தமிழகத்தில் முதல் தவணையாக இதுவரை முதியோர், இணை நோய் பாதிப்புள்ள 5.70 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி: சுகாதாரத் துறை அதிகாரிகள் தகவல்

தமிழகத்தில் முதல் தவணையாக இதுவரை முதியோர், இணை நோய் பாதிப்புள்ள 5.70 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி: சுகாதாரத் துறை அதிகாரிகள் தகவல்
Updated on
1 min read

தமிழகத்தில் இதுவரை 5.70 லட்சம்முதியவர்கள், இணை நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு முதல்தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தியாவில் கரோனா வைரஸ்தொற்று பரவலை தடுக்க கோவேக்ஸின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. முதல்கட்டமாக முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 வயது முதல் 59 வயது வரையுள்ள இணை நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

மேலும் முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டு 28 நாட்கள் நிறைவடைந்தவர்களுக்கு இரண்டாம் தவணையாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனையில் இலவசமாகவும் தனியார் மருத்துவமனைகளில் ரூ.250கட்டணமாகவும் வசூலிக்கப்படுகிறது. இதுவரை முதல் மற்றும் இரண்டாம் தவணையாக 13 லட்சத்து 86,379 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கூறும்போது, “தமிழகத்தில் முன்களப்பணியாளர்களைவிட முதியவர்கள் மற்றும் இணை நோய் பாதிப்புள்ளவர்கள் ஆர்வமாக வந்துதடுப்பூசி போட்டுக்கொள்கின் றனர்.

இதுவரை மொத்தம் 13 லட்சத்து 86,379 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில், முதல்தவணையாக 3 லட்சத்து 48,032முதியவர்களும் 2 லட்சத்து 22,210இணை நோய் பாதிப்புள்ளவர் களும் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். 28 நாட்கள் முடிவடைந்ததும் அவர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி போடப்படும்” என்றனர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in