Published : 14 Mar 2021 03:14 AM
Last Updated : 14 Mar 2021 03:14 AM
கும்பகோணம் அருகே அய்யா வாடியில் உள்ள பிரத்தியங்கரா தேவி கோயிலில் நேற்று நடை பெற்ற நிகும்பலா யாகத்தில் முதல்வர் பழனிசாமியின் மனைவி ராதா பங்கேற்றார்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே அய்யாவாடி கிராமத்தில் உள்ள பிரத்தியங்கரா தேவி கோயிலில் அமாவாசை தோறும் நிகும்பலா யாகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இக்கோயிலில் நேற்று நடைபெற்ற யாகத்தில், முதல்வர் பழனிசாமியின் மனைவி ராதா கலந்து கொண்டு, சிறப்பு வழிபாடு நடத்தினார். அதேபோல, தேர்தலில் போட்டியிடவுள்ள திமுக, அதிமுக வேட்பாளர்கள் சிலரும் நேற்று இக்கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தினர்.
இதுகுறித்து அதிமுகவினர் கூறியபோது, “மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த 2000-ம் ஆண்டு இந்தக் கோயிலுக்கு வந்து நிகும்பலா யாகம் நடத்திய பின்னரே முதல்வரானார். அதிலிருந்து, அரசியல்வாதிகள் பலரும் இங்கு வந்து நினைத்த காரியம் கைகூட வேண்டிக்கொள்வது வழக்கம். அதன்படி, அமாவாசை தினமான இன்று (நேற்று) முதல்வரின் மனைவி நிகும்பலா யாகத்தில் கலந்துகொண்டுள்ளார். கடந்த தை அமாவாசை யாகத்திலும் அவர் பங்கேற்றார்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT