கோடையில் குளுமை குளியல்: குற்றாலத்தில் மக்கள் உற்சாகம்

பழைய குற்றாலம் அருவியில்  குளித்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்.
பழைய குற்றாலம் அருவியில் குளித்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்.
Updated on
1 min read

தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் தென்மேற்கு பருவமழைக் காலமான ஜூன் முதல் செப்டம்பர் வரை சாரல் மழைபெய்யும். இதனால், குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும்.

கடந்த ஆண்டு கரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டபோது, குற்றாலம் அருவிகளில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டது. மார்ச் மாதம்விதிக்கப்பட்ட தடை டிசம்பர் வரை நீடித்தது. டிசம்பர் 15 முதல் கட்டுப்பாடுகளுடன் அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்பட்டது. இதனால், 9 மாதங்களாக களையிழந்து காணப்பட்ட குற்றாலம் மீண்டும் களைகட்டத் தொடங்கியது.

இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக வெயில் சுட்டெரித்ததால் அருவிகளில் நீர்வரத்து வெகுவாக குறைந்தது. சமீபத்தில் பெய்த கோடை மழையால் அருவிகளில் மீண்டும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. கோடை காலத்தில் குளுமையான அருவிக் குளியலை அனுபவிக்க சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். நேற்று வெப்பத்தின் தாக்கம் குறைவாக இருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in