Published : 14 Mar 2021 03:16 AM
Last Updated : 14 Mar 2021 03:16 AM
சசிகலா ஒதுங்கியிருப்பது அமமுகவின் வெற்றிக்கு வாய்ப்பாக இருக்கும் என முதுகுளத்தூர் தொகுதி அமமுக வேட்பாளர் எம். முருகன் தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்ட எல்லையான க.விலக்கில் முதுகுளத்தூர் தொகுதி அமமுக வேட்பாளர் எம்.முருகனுக்கு, அக்கட்சியின் நிர்வாகிகள் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித் தனர். இதனைத் தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட கார்களில் ஊர்வலமாக கமுதி அருகேயுள்ள பசும்பொன் முத்து ராம லிங்கத்தேவர் நினைவிடத்தில் அவர் அஞ்சலி செலுத்தி தனது தேர்தல் பிரச் சாரத்தை தொடங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அமமுகவின் வெற்றி வாய்ப்பு முதுகுளத்தூர் தொகுதியில் பிரகாசமாக உள்ளது. சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதாக அறிவித்துள்ளது தான் அமமுக வெற்றிக்கு வாய்ப்பாக இருக்கும் என்றார்.
அப்போது கமுதி அமமுக ஒன்றியச் செயலாளர்கள் வி.கே.ஜி.முத்துராமலிங்கம், கே.முத்து, பசும் பொன் ஊராட்சிமன்றத் தலைவர் ராம கிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் இருந் தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT