Published : 14 Mar 2021 03:16 AM
Last Updated : 14 Mar 2021 03:16 AM

‘எங்களது வாக்கு விற்பனைக்கு அல்ல’ - சிவகங்கை அருகே அறிவிப்பு பலகை வைத்த மக்கள்

சிவகங்கை அருகே கிராம எல்லையில் ‘எங்களது வாக்கு விற்பனைக்கு அல்ல’ என மக்கள் அறிவிப்பு பலகை வைத் தனர்.

தமிழகத்தில் தேர்தல்களின் போது வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பது தடுக்க முடியாத ஒன்றாக மாறி வருகிறது. வாக்குகளை விற்காதீர்கள் எனத் தேர்தல் அதிகாரிகள் பிரச்சாரம் செய்தாலும், வாக்காளர்கள் கண்டுகொள்வதில்லை.

இந்நிலையில் சிவகங்கை மாவட்டம், பெரியக்கோட்டை ஊராட்சி தெக்கூரில் `எங்கள் வாக்குகள் விற்பனைக்கு அல்ல' என்று அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது. இதை அக்கி ராமத்தைச் சேர்ந்த வ.உ.சி. இளை ஞர் நற்பணி மன்றத்தினரும், மகளிர் மன்றத்தினரும் இணைந்து வைத்துள் ளனர். இதையடுத்து தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துக்கழுவன், நேரு யுவகேந்திரா அமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் அக்கிராம மக் களை பாராட்டினர்.

வ.உ.சி. இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகி க.வாசு தேவன் கூறியதாவது: எங்கள் கிராமத்தில் 500 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களிடம் வாக்குகளை விற்க வேண்டாம். அது நாட்டுக்கும், நமக்கும் அவமானம் எனப் புரிய வைத்தோம். பெண்கள் உட்பட அனை வரும் இதை ஏற்றுக் கொண்டனர்.

இதனால் அரசியல் கட்சியினர் பணத்தோடு வந்துவிடக் கூடாது என் பதற்காக ஊர் எல்லையிலேயே ‘எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல' என அறிவிப்புப் பலகையை வைத்துள்ளோம். அடிப்படை பிரச்சினைகளைத் தீர்ப்பதாக இருந்தால் மட்டும் வாக்குக் கேட்டு வர லாம், என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x