Published : 13 Mar 2021 03:14 AM
Last Updated : 13 Mar 2021 03:14 AM

ஆம்பூரில் சீமான் பிரச்சாரம்

ஆம்பூர் புறவழிச்சாலையில் தேர்தல் பிரச்சாரம் செய்த சீமான்.

ஆம்பூர்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை யொட்டி திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் மெகருன்னிஷா போட்டியிடுகிறார். அவரை, ஆதரித்து வாக்கு சேகரிக்க ஆம்பூருக்கு அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று முன்தினம் வந்தார்.

ஆம்பூர் புறவழிச்சாலையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் அவர் பேசும்போது, "கனிம வளங்கள் கொள்ளையடிக் கப்பட்டு அழிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து 6 ஆயிரம் மணி நேரம் பொதுமக்களுக்காக நான் பேசியிருக்கிறேன். ஆனால், பொதுமக்களுக்கு அது பழகிவிட்டது. அதிமுக அல்லது திமுக என மாறி மாறி வாக்களிக் கின்றனர்.

எனவே, நடைபெற உள்ள தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத் துங்கள். அதிமுக, திமுகவுக்கு வாக்களிப்பது வழக்கமாக நடைபெறும் ஒன்றாகும். இதுவே மக்களுக்கு பழகிவிட்டது. இரண்டு கட்சிகளையும் விட்டு வெளியே வாருங்கள். பசி, பஞ்சமற்ற, ஊழல், லஞ்சமற்ற, கொலை, கொள்ளையற்ற, சாதி இழிவு, தீண்டாமையற்ற, மது, மத போதையற்ற, அடக்குமுறை, ஒடுக்குமுறையற்ற, பெண்ணிய ஒடுக்குமுறையற்ற, பாலியல் வன்கொடுமையற்ற தூய தேசம் படைக்க வேண்டுமானால் நாம் தமிழர் கட்சியின் சின்னமான விவசாயி சின்னத்துக்கு வாக் களிக்க வேண்டும்.

ஆம்பூர் சட்டப்பேரவைத்தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மெகருன்னிஷாவுக்கு விவசாயி சின்னத்தில் வாக்களியுங்கள்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x