Published : 11 Mar 2021 03:12 AM
Last Updated : 11 Mar 2021 03:12 AM

வேதாரண்யம் அருகே கடல் பகுதியில் கரை ஒதுங்கிய ஏலக்காய் மூட்டைகள்

மணியன் தீவு அருகில் கடந்த 2 நாட்களில் தலா 65 கிலோ எடையுள்ள 4 ஏலக்காய் மூட்டைகள் கரை ஒதுங்கின.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த மணியன் தீவு கடற்கரைக்கு தெற்கே முனங்காடு கடற்கரைப் பகுதியில் நேற்று 2 சாக்கு மூட்டைகள் கரை ஒதுங்கி கிடந்தன. இதுகுறித்து அப்பகுதியில் மீனவர்கள் அளித்த தகவலின்பேரில், வேதாரண்யம் கடலோர காவல் குழும டிஎஸ்பி குமார், இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீஸார் அங்கு சென்று, 2 சாக்கு மூட்டைகளையும் கைப்பற்றி, பிரித்துபார்த்தபோது, தலா 65 கிலோ எடையுள்ள ஏலக்காய் இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.2.50 லட்சம் எனக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த கடலோர காவல் குழும போலீஸார், இந்த ஏலக்காய் மூட்டைகள் கடல் வழியாக படகில் இலங்கைக்கு கடத்திச் செல்லப்பட்டபோது தவறி விழுந்ததா என விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே, நேற்று முன்தினம் இதே பகுதியில் கரைஒதுங்கிய தலா 65 கிலோ எடையுள்ள 2 ஏலக் காய் மூட்டைகளை போலீஸார் கைப்பற்றியிருந்த நிலையில், நேற்று மேலும் 2 ஏலக்காய் மூட்டைகள் கரை ஒதுங்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x