Published : 07 Mar 2021 03:14 AM
Last Updated : 07 Mar 2021 03:14 AM
தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிடும் 20 தொகுதிகளில் ஒரு இடத்தில்கூடவெற்றி பெறாது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அக்கட்சியில் விருப்ப மனு விநியோகம் நேற்று தொடங்கியது. முதல் நாளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் மனுக்களை பெற்றுச் சென்றுள்ளனர்.
இதற்கிடையே, விசிக தலைவர்திருமாவளவன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
விசிக சார்பில் போட்டியிட 3 நாட்களுக்கு விருப்ப மனுக்கள் வழங்கப்படுகின்றன. ஓரிரு நாளில் விசிக போட்டியிடும் தொகுதிகள் எவை என்பது அறிவிக்கப்படும். வரும் 10-ம் தேதி வேட்பாளர்கள் நேர்காணல் நடைபெறும். அதன்பிறகு வேட்பாளர்கள் பட்டியல் அறிவித்து, தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குவோம்.
தமிழகத்தில் சமூகநீதியை நிலைநாட்டும் வகையில் திமுக தலைமையில் இணைந்து செயல்பட்டு வருகிறோம். எங்களுக்கு6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதால், பின்னடைவு என்றோஅல்லது சிறுமைப்படுத்திவிட்டார்கள் என்றோ வருத்தப்படவில்லை. கூடுதலாக தொகுதிகள் கிடைத்திருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்போம். ஆனாலும் இது வெறும்6 தொகுதிகள் அல்ல, 6 சட்டப்பேரவை உறுப்பினர்கள். அதிமுககூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு இடத்தில்கூட வெற்றி பெறாது. எடுத்த எடுப்பிலேயே 20 தொகுதிகளை திமுக கூட்டணிக்கு அதிமுக விட்டுக்கொடுத்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT