Published : 07 Mar 2021 03:15 AM
Last Updated : 07 Mar 2021 03:15 AM
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகளும் தோல்வியடையும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் டி.ராஜா தெரிவித்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டம் திருச்சியில் நேற்றுநடைபெற்றது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் டி.ராஜா செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழகம், கேரளா, மேற்கு வங்கம்,புதுச்சேரி, அசாம் ஆகிய 5 மாநிலங்களில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் அளிக்கும் தீர்ப்பு, மத்தியபாஜக அரசின் வீழ்ச்சிக்கான தொடக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். சமூகநீதி, சமத்துவம்உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் முன்னேறிய மாநிலமாக இருப்பதால் தமிழகத்தில் ஆர்எஸ்எஸ், பாஜகவின் செயல் திட்டங்களை செயல்படுத்த முடியாது. மதவாத அரசியல் இங்குஎடுபடாது. இத்தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்கும் கட்சிகளும் தோல்வி அடையும் என்றார்.
எண்ணிக்கை முக்கியமல்ல
மாநிலச் செயலாளர் ஆர்.முத்தரசன் கூறும்போது, ‘‘இத்தேர்தலில் வகுப்புவாத சக்திகளை வீழ்த்த வேண்டும்என்பதுதான் முக்கிய நோக்கம். எத்தனை தொகுதிகளில் போட்டியிடுகிறோம் என்பதுமுக்கியமல்ல, லட்சியமே முக்கியம். எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவோம் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும்’’ என்றார்.
இக்கூட்டத்தில் எம்.பி.க்கள் சுப்பராயன், செல்வராஜ், தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் சி.மகேந்திரன், முன்னாள் எம்எல்ஏக்கள் வால்பாறை ஆறுமுகம், விருதுநகர் ராமசாமி, சிவகங்கை குணசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT