Published : 06 Mar 2021 03:14 AM
Last Updated : 06 Mar 2021 03:14 AM

கட்சியிலிருந்து பலர் வெளியேறியதால் புதுவை மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் அதிகரிப்பு

புதுவை காங்கிரஸ் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பதவி விலகினர். அதைத்தொடர்ந்து கட்சியின் மாநில, மாவட்ட, அணி, வட்டார, நிர்வாகிகள் தொடர்ந்து வெளியேறி வருகின்றனர். இத னால் காங்கிரஸ் கட்சியின் நிலைப் பாடு எப்படி இருக்கும் என்ற கேள்வி எழுந்தது.

இதுபற்றி கட்சி வட்டாரங்களில் விசாரித்தபோது, “கட்சியிலிருந்து பலர் விலகுவதை தடுக்க காங்கிரஸ் கட்சி தலைமை மாநில நிர்வாகிகளின் எண்ணிக்கையை 90 ஆக உயர்த்தியுள்ளது. கடந்தகாலத்தில் அதிகபட்சமாக 42 பேர்மாநில பதவியில் இருந்தனர். தற்போது 48 பேருக்கு கூடுதலாகமாநில பதவிகள் வழங்கப்பட்டுள் ளது. மாநில தலைவராக ஏ.வி.சுப்பிரமணியன் நீடிக்கிறார். அவருடன் செயல் தலைவர்களாக ஏகேடி.ஆறுமுகம், முன்னாள் எம்எல்ஏ நீலகங்காதரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுதவிர மூத்த துணைத் தலைவராகவும், பிரதேச காங்கிரஸ் கமிட்டி ஒருங் கிணைப்பாளராக தேவதாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதுதவிர முன்னாள் முதல்வர் ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர்கள் பெத்தபெருமாள், வல்சராஜ் உள்ளிட்ட7 பேர் துணைத் தலைவர்களா வும், கட்சியின் பொருளாளராக ஜெயமூர்த்தியும் நியமிக்கப்பட் டுள்ளனர். 20 பேர் பொதுச் செயலாளர்களாகவும், 34 பேர்செயலாளர்களாகவும், மாவட்ட தலைவர்களாக 6 பேர், செயற் குழு உறுப்பினர்களாக 18 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்” என்றுகுறிப்பிட்டனர். “வேறு கட்சியிலி ருந்து வருபவர்களுக்கு போட்டியிட வாய்ப்பு தரக்கூடாது” என்றகோரிக்கையும் கட்சியில் வலுப் பெறத் துவங்கியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x