Published : 06 Mar 2021 03:15 AM
Last Updated : 06 Mar 2021 03:15 AM
ஆம்பூரில் பதற்றமான வாக்குச் சாவடிகளை மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சிவன் அருள் ஆம்பூர் வட்டாட்சியர் அலுவல கத்துக்கு நேற்று காலை வந்தார். இதைத்தொடர்ந்து, ஆம்பூர் சட்டப் பேரவை தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ள ஆம்பூர் பன்னீர்செல்வம் நகர், பி-கஸ்பா, மஜ்ஹருல்லும் கல்லூரி உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளுக்கு சென்று அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.
இதைத்தொடர்ந்து, ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலை அருகேயுள்ள பள்ளி சுவற்றில் மாவட்ட நிர்வாகம் சார்பில் கரோனா தொற்று தடுப்பு விழிப்புணர்வு மற்றும் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது தொடர்பாக வரையப்பட்டுள்ள சுவர் ஓவியங்களை அவர் பார்வை யிட்டார்.
பின்னர், ஆம்பூர் நகராட்சி அலுவலகத்தில் மாதிரி வாக்குப் பதிவு மையத்தை ஆட்சியர் சிவன் அருள் பார்வையிட்டு அங்கு வந்த பொதுமக்களிடம் சட்டப்பேரவை தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளதாக ஆட்சியர் சிவன் அருள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியின்போது ஆம்பூர் வட்டாட்சியர் அனந்தகிருஷ்ணன், நகராட்சி ஆணையாளர் சவுந்திர ராஜன், ஆம்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் சச்சிதானந்தம் மற்றும் தேர்தல் பணி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT