பூசாரியை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை கோரி குமாரபாளையம் காவல்நிலையத்தை பாஜகவினர் முற்றுகை

பூசாரியை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை கோரி குமாரபாளையம் காவல்நிலையத்தை பாஜகவினர் முற்றுகை
Updated on
1 min read

குமாரபாளையம் காளியம்மன், மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி பாஜகவினர் பிரதமர் நரேந்திரமோடி புகைப்படம் கொண்ட காலண்டர்களை மக்களிடம் விநியோகித்தனர்.

தகவல் அறிந்து வந்த தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகள் காலண்டர்களை பறிமுதல் செய்தனர். மேலும், காலண்டர் விநியோகித்த பாஜக நிர்வாகி கிருஷ்ணன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனிடையே காலண்டர் விநியோகிக்க மாரியம்மன் கோயில் பூசாரியே காரணம் எனக் கூறி பூசாரி சண்முகசுந்தரத்தை சிலர் தாக்கி யுள்ளனர். இதையறிந்த பாஜக மற்றும் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர் கோயில் பூசாரியை தாக்கிய நபர்களை கைது செய்யக்கோரி குமாரபாளையம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

அவர்களை சமரசம் செய்த காவல் துறையினர் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையேற்று அனைவரும் கலைந்து சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in