Published : 25 Nov 2015 08:54 AM
Last Updated : 25 Nov 2015 08:54 AM
திருச்சியில் இருந்து சென்னைக்குப் பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பஸ் விழுப்புரம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. நேற்று அதிகாலை புறவழிச் சாலையில் இருந்து விழுப்புரம் பேருந்து நிலையத்துக்குத் திரும்பியபோது, சென்னையில் இருந்து அறந்தாங்கியை நோக்கிச் சென்ற மற்றொரு அரசு விரைவு பஸ், விழுப்புரம் பேருந்து நிலையம் நோக்கி திரும்பிய அரசு பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் திருச்சியில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற அரசு பஸ்ஸில் பயணம் செய்த கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்த மோகன்(42), சிவகங்கை மாவட்டம் காரைக்குடி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த பாண்டியன்(55), சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே கோட்டையூர் சிறுபாலை பகுதியைச் சேர்ந்த தியாகராஜன்(40) ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், இரண்டு அரசு பஸ்களிலும் பயணம் செய்த 31 பேர் படுகாயம் அடைந்தனர்.
தகவலறிந்த விழுப்புரம் தாலுகா போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று படுகாயமடைந்தவர்களை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT