Published : 02 Mar 2021 03:13 AM
Last Updated : 02 Mar 2021 03:13 AM

இரட்டை இலை சின்னத்தில் அஇமூமுக போட்டி: மதுரையில் டாக்டர் சேதுராமன் தகவல்

ந.சேதுராமன்

மதுரை

அதிமுக-பாஜக கூட்டணியில் டாக்டர் ந.சேதுராமன் தலைமை யிலான அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகமும் இடம் பெற்றுள்ளது. இக்கட்சியுடனான தொகுதி ஒதுக்கீடு பேச்சுவார்த்தை, அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் ந.சேதுராமன், அஇ மூமுக பொதுச் செயலர் எஸ்.ஆர்.தேவர், இணைப் பொதுச் செயலர் ரா.பிரபு, மாநில இளை ஞரணிச் செயலர் பெரியதுரை ஆகியோர் பங்கேற்றனர்.

இது தொடர்பாக ந.சேதுராமன் மதுரையில் கூறியதாவது:

அதிமுகவுடனான தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தையில் எங்கள் கட்சிக்கு 3 தொகுதிகளை ஒதுக்குமாறு கேட்டுள்ளோம். இருநாட்களில் எங்களுக்கு ஒதுக் கப்படும் தொகுதியை அறிவிப் பதாக முதல்வரும், துணை முதல் வரும் தெரிவித்தனர். இந்தத் தேர் தலில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் அஇமூமுக போட்டியிடும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x