Published : 01 Mar 2021 03:17 AM
Last Updated : 01 Mar 2021 03:17 AM

பெரம்பலூர் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் 2 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழப்பு

விபத்தில் சேதமடைந்த இரு சக்கர வாகனம்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூரைச் சேர்ந்தவர் பாண்டியன் மனைவி தனம்(50). இவர், தனது மகன் சக்திவேல்(22), மகள் பரமேஸ்வரி(26), பரமேஸ்வரியின் குழந்தைகள் செந்நிலா(3), தமிழ் நிலவன்(2),மற்றொரு மகள் பச்சையம்மாளின் மகள் நந்திதா(2) ஆகியோருடன் ஒரு இருசக்கர வாகனத்தில் கொளப்பாடியில் உள்ள பச்சையம்மாளின் வீட்டிலிருந்து நேற்று வேப்பூருக்கு புறப்பட்டுள்ளார். இருசக்கர வாகனத்தை சக்திவேல் ஓட்டியுள்ளார்.

வேப்பூர்- புதுவேட்டக்குடி சாலையில், இச்சிலிக்குட்டை அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே வேப்பூரிலிருந்து புதுவேட்டக்குடி நோக்கி வந்த கார் இருசக்கர வாகனம மீது மோதி, அருகிலிருந்த சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த பரமேஸ்வரி, செந்நிலா, நந்திதா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்து சாலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தனம், சக்திவேல், தமிழ்நிலவன் ஆகியோரை அக்கம்பக்கத்தி னர் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தனம் உயிரிழந்தார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சக்திவேல், தமிழ்நிலவன் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில், சிகிச்சை பலனின்றி சக்திவேல் உயிரிழந்தார். தமிழ்நிலவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரு கிறது.

இருசக்கர வாகனம் மீது மோதிய காரில் பயணித்த அனைவரும் காரை அப்படியே விட்டு விட்டு தப்பியோடிவிட்டனர். இந்த விபத்து குறித்து குன்னம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, கார் ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x