Published : 07 Nov 2015 09:33 AM
Last Updated : 07 Nov 2015 09:33 AM
சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சி சார்பில் 2-வது தடுப்பூசி முகாம் இன்று முதல் நவம்பர் 16-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த முகாம் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் காலை 9 முதல் மாலை 4 மணி வரை நடைபெறும்.
இந்த முகாம்களில் தடுப்பூசி போடாமல் விடுபட்ட 2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும், கர்ப்பிணிப் பெண்களுக்கும் தடுப்பூசி போடப்படும். இடம்பெயர்ந்து வாழும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும், முகாம் நாட்களில் அவரவர் வசிக்கும் இடத்திலேயே தடுப்பூசி போடப்படும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT