Published : 28 Feb 2021 03:18 AM
Last Updated : 28 Feb 2021 03:18 AM

தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டோம்: ஜி.கே. வாசன் தகவல்

தமாகா தலைவர் ஜி.கே. வாசன் திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

மத்திய அரசுடன் இணக்கமான ஆட்சி தமிழகத்தில் இருக்க வேண்டும். தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமாக செயல்படவில்லை. மக்களுக்கான திட்டங்களை தடுக்கும் நோக்கத்திலேயே செயல்பட்டன.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பணிகளை நாங்கள் தொடங்கிவிட்டோம். மார்ச் 2-ம் தேதி சென்னையில் தமாகா சார்பில் தொழிலாளர்கள் கூட்டம், 3-ம் தேதி இளைஞர் அணி கூட்டம், 5-ம் தேதி மாணவரணி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிமுக தலைமையிலான வெற்றி கூட்டணியில் தமாகா உள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x