Published : 14 Nov 2015 09:14 AM
Last Updated : 14 Nov 2015 09:14 AM

வெள்ளத்தில் சிக்கி 6 பேர் மாயம்

ஸ்ரீபெரும்புதூர் பெரிய ஏரியில் தண்ணீர் செல்வதை பார்ப்பதற்காக, பத்கவச்சலம் நகரைச் சேர்ந்த மணிகண்டன்(16), லோகநாதன்(16) ஆகியோர் ஏரிக்குச் சென்றனர். அப்போது, கரையில் ஏற்பட்ட திடீர் மண்சரிவில் சிக்கியதில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.

இதேபோல் காஞ்சி அருகே உள்ள ஏனாத்தூர் ஏரியில் சகோதரர்களான சரத்(17), சதீஸ்(16) ஆகியோர் மாயமானார்கள்.

உத்திரமேரூர் அருகே உள்ள காலூர் ஏரியில் மூழ்கி முரளி(21) காணாமல் போனார். நத்தப்பேட்டை, அல்லாபாத் ஏரிகளில் ஏற்பட்ட வெள்ளபெருக்கில் சிக்கி111 ஆடுகள், 10-க்கும் மேற்பட்ட மாடுகள் பலியாகின.

பழவேற்காடு

பழவேற்காடு ஏரியை ஒட்டியுள்ள திருமலைநகரைச் சேர்ந்த தேசப்பன்(35) உள் ளிட்ட 5 மீனவர்கள் படகில் சென்றபோது, படகு கவிழ்ந்தது. இதில் தேசப்பன் மட்டும் அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச்செல்லப்பட்டார். திருப்பாலைவனம் போலீஸார் மற்றும் மீனவர்கள் அவரை தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x