Published : 25 Feb 2021 03:15 AM
Last Updated : 25 Feb 2021 03:15 AM

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: சென்னையில் 27-ம் தேதி நடைபெறுகிறது

சென்னை

சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர்.சீதாலட்சுமிநேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

படித்த, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை தனியார் துறையில் பணியமர்த்தும் வகையில் சென்னை சாந்தோம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ராயபுரம் தூயபீட்டர்ஸ் மேல்நிலைப் பள்ளியில் 27-ம் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.

இதில், 150-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளன. 8-ம் வகுப்பு, எஸ்எஸ்எல்சி, ஐடிஐ, பாலிடெக்னிக், பிளஸ் 2, பிஏ, பிஎஸ்சி, பிகாம்பட்டதாரிகள், பிஇ, பிடெக் பட்டதாரிகள்என அனைத்து கல்வித் தகுதியினரும் பங்கேற்று பயன்பெறலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x